
சென்னை- திருச்செந்தூர் இடையே ஈரோடு, சேலம், மதுரை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்.0657) மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.
திருச்செந்தூரில் இருந்து 23-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்.0658) மறுநாள் மதியம் 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
இந்த ரெயிலில் பயணம் செய்ய இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.





