பதாகை
புதிய அணைக்கு ஆய்வு நடத்த கேரளாவுக்கு தடை இல்லை
வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2009 00:53   
(0 votes, average 0 out of 5)

 

முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு தடையில்லை' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. "ஆய்வுப் பணி மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்' எனக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, 2006 பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த கேரள அரசு, மாநிலத்தில் உள்ள எந்த அணையின் நீர்மட்டம் தொடர்பாகவும் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில், "கேரள நீர்ப்பாசன மற்றும் தண்ணீர் பாதுகாப்பு (திருத்த) சட்டம் 2006' என்ற சட்டத்தை இயற்றியது. அத்துடன் முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டவும் திட்டமிட்டது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை மேற்கொள்ள, கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பிரகாஷ் வாதிடுகையில், ""புதிய அணைக்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், தமிழக அரசின் மனு மீதான விசாரணையை இரண்டு மாத காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார்.ஆனால், அவரின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரதான மனு மீதான விசாரணை தொடர்ந்து நடக்கும் என்று அறிவித்தனர். அதனால் இன்றும் விசாரணை தொடர்கிறது.

 

கருத்து (0)

Subscribe to this comment's feed

கருத்தை கூறவும்

சிறியது | பெரியது
security image
மேலே காணப்படும் எழுத்துக்களை நிரப்புக

busy
 

விளம்பரம்