
கடைசியாக நடைபெற்ற தொடர்களில் வங்காளதேசத்திடம் அடி வாங்கி சில காயங்களுடன் இந்தியாவை எதிர்கொள்ள இந்தியாவிற்கு வந்தது நியுசிலாந்து. திடீரென தனது காயங்களை தேற்றிக்கொண்டார் போல் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்த தொடங்கியது அந்த அணி.இருப்பினும் நமது புது பேட்டிங் வரவான ஹர்பஜன் சிங்கிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு முதல் இரண்டு ஆட்டங்களையும் ஒரு வழியாக டிரா செய்துவிட்டு மூன்றாவது ஆட்டத்திலாவது வெற்றிக்கொண்டு விடலாம் என்று ஆட்டத்தை தொடங்கியது நியுசிலாந்து அணி.
டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய நியுசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சில் 193 ரன்களுக்கு நொறுங்கிப்போனது. பின்னர் ஆடிய இந்திய அணி நியுசிலாந்து அணியை பந்தாடியது வந்தவர்களெல்லாம் அரைசதம் அடிக்க சற்றே கலங்கிப்போனார் வெட்டோரி. ஒருவழியாக 566 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி நியுசிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தது, இருப்பினும் இந்தியா வேகம் குறையாமல் தனது அதிரடி போக்கை தொடர சுக்கு சுக்காக நொறுங்கி வெளியேறியது நியுசிலாந்து அணி 175 ரன்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 0:1 என்ற கணக்கில் கோப்பையையும் பறிகொடுத்தது.
இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் மூன்றாவது இடத்தில் இந்த வெற்றியையும் சேர்த்துக்கொண்டது. இன்னிக்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை ருசித்தது இந்தியா. ஆட்டநாயகன் விருது 191 ரன்கள் எடுத்த ராகுல் டிராவிட் பெற்றுக்கொண்டார், தொடர் நாயகனின் விருதையோ புதிய நட்சத்திரம் (பேட்டிங்கிற்கு) ஹர்பஜன் சிங் கைப்பற்றினார். இதன் மூலம் தமது முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டது இந்திய அணி.
வெற்றிகள் கிரிக்கெட்டுகளில் மட்டும் தானா? உலகில் நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன, குறிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக்ஸ் இன்னும் பல விளையாட்டு வீரர்களே சிறிது சிந்தியுங்கள்


