பதாகை
விளையாட்டு
நேரு கோப்பை - சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
செவ்வாய்க்கிழமை, 01 செப்டம்பர் 2009 19:41   

 

நேரு கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இந்திய அணி சடன்-டெத் முடிவில் 6-5 என்ற கோல் கணக்கில் சிரியாவை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. 14ஆவது நேரு கோப்பை கால்பந்து போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, சிரியா, இலங்கை, கிர்கிஸ்தான், லெபனான் ஆகிய 5 நாடுகள் கலந்து கொண்டன. லீக் ஆட்டங்கள் முடிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, சிரியா அணிகள் நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதை தொடர்ந்து அளிக்கப்பட்ட முதல் 15 நிமிட கூடுதல் நேரத்திலும் கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது 15ஆவது கூடுதல் நேரத்தில் (114ஆவது நிமிடம்) இந்திய அணி கேப்டன் பெய்சூங் பூட்டியாவை, சிரியா வீரர் விதிமுறைக்கு மாறாக தடுத்து நிறுத்தினார். இதனால் இந்திய அணிக்கு பிரிகிக் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி ரென்னடி சிங் கோல் அடித்தார். கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் சிரியா அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் அலி டியாப் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதல் 5 பெனால்டி ஷூட் முடிவில் இரு அணிகளும் தலா 3 பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றி சமநிலை வகித்தன. இதை தொடர்ந்து சடன்-டெத் முறை கையாளப்பட்டது. இதில் முதல் பெனால்டி ஷுட் வாய்ப்பை இரு அணிகளும் கோலாக்கின. அடுத்த வாய்ப்பை இந்திய அணி வீரர் கோலாக்கினார். ஆனால் சிரியா அணி வீரர் அடுத்த பந்தை இந்திய அணி கோல் கீப்பர் சுப்ரதா பால் அபாரமாக தடுத்தார். அவர் தடுத்ததும் ஸ்டேடியமே அதிர்ந்தது. இந்திய அணி வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் இந்திய அணி 6-5 (1-1) என்ற கோல் கணக்கில் சிரியாவை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2007ஆம் ஆண்டு நடந்த போட்டியிலும் இந்திய அணி, சிரியாவை வீழ்த்தி சாம்பியன் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆட்டத்தை பாலிவுட் நடிகர் சல்மான்கான், மத்திய அமைச்சர்க பிரபுல் பட்டேல், எம்.எஸ்.கில் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

 

 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் சானியா வெற்றி
செவ்வாய்க்கிழமை, 01 செப்டம்பர் 2009 19:36   

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் போட்டியின் முதல் சுற்றில் மகளிர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மனும் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு தகுதிப் பெற்ற முதல் இந்திய பெண் மற்றும் ஆண் என்ற பெருமையை இருவரும் பெற்றனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று நியூயார்க் நகரில் தொடங்கியது. இதில் உலக தரவரிசையில் 71ஆவது இடம் வகிக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, தனது முதல் சுற்றில் 64ஆம் நிலை வீராங்கனை பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒல்கா கோவர்ட்சோவாவுடன் மோதினார். இந்தப் போட்டியில் சானியா 6-2, 3-6, 6-3, என்ற செட் கணக்கில் ஓல்காவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

 

 
2011 உலக கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டிகள் இல்லை; இந்தியா, இலங்கை, வங்காளதேசத்தில் கூடுதல் ஆட்டங்கள்
சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:50   
2011-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் இணைந்து நடத்த திட்டமிட்டு இருந்தது. கடந்த மார்ச் 3-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஸ்டேடியம் அருகே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதை தொடர்ந்து பாகிஸ் தானில், உலக கோப்பை போட்டிகள் நடைபெறாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி., தெரிவித்தது


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 


பக்கம் 1 - 49

விளம்பரம்