
அழகிரி மகன் தயாநிதியின் திருமணம் மதுரையில் நாளை நடைபெறுகிறது. முன்னதாக இன்று இரவு தயாநிதி , அனுஷா தம்பதிகளின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது (பிரம்மாண்டமாக).
தனது பேரனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதி இன்று மாலை மதுரை வந்தார் அவருடன் அவரது மனைவி தயாளு அம்மாளும் உடன் வந்தார்கள். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் உள்ளார் எனபது கூடுதல் செய்தி.
ஒரு திருமண நிகழ்ச்சியை அரசியல் பகுதியில் பிரசுரிக்கிறோம் என்று வியக்க வேண்டாம், இது ஒரு சாதாரண பாமரனின் திருமணம் அல்ல. தமிழ்நாட்டின் முதல் குடும்பத்தின் ஒரு திருமண நிகழ்வு ஆகும். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரின் மகனும், தமிழக முதல்வரின் பேரனும், துணை முதல்வரின் அண்ணன் மகனும், கூடுதலாக மத்திய மந்திரியின் மருமகனுமான தயாநிதியின் திருமணமாகும். இதனால் அனைத்து அரசியல் பெரிய தலைகளும் மதுரையில் முகாமிட்டுள்ளன எனபது தன இதற்கு முக்கிய காரணம். முன்னால் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா முக்கிய விருந்தாளி எனபது குறுப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கியமானவர்களில் சிலர் பின்வருமாறு, மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி, ஆ.ராசா, கனிமொழி, குலாம்நபி ஆசாத், ஜி.கே.வாசன், தயாநிதி மாறன், மற்றும் பலர். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தியாகும். மற்றுமொரு ஆச்சர்யம் என்னவென்றால் முதல்வரின் மகனும் மத்திய அமைச்சருமான மு.க அழகிர ஆங்கில உடையில் பளிச்சிட்டார் என்பது தான்.











