
தமிழ் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும், இலங்கை அரசின் நடவடிக்கை அதிருப்தி தருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். அவர் கூறியதாவது,""இளையான்குடி அருகே சூராணத்தில் தி.மு.க., கூட்டத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது. தமிழக போலீசார், அவர்களை இயக்கியவர்களை பிடிக்கவேண்டும். வடகிழக்கு மாநிலத்தில் பிரிவினைவாதிகள் வன்முறைக்கும், ஏழு மாநிலங்களில் பரவியுள்ள நக்சலைட்டுகளுக்கும் உள்துறை அமைச்சகம் முற்றுப்புள்ளி வைக்கும்
தமிழகத்தில் நக்ஸலைட் இயக்கம் இல்லை. ஆங்காங்கே சில அனுதாபிகள் இருக்கலாம். ஜூலை 1ம் தேதி என்.எஸ்.ஜி.,அமைப்பு துவக்கப்படும். கடலோர பாதுகாப்பிற்கு செப்30ம் தேதிக்குள் 28 படகுகள் தரப்படும். சிவகங்கை தொகுதியில் எனது வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்திருப்பது, என் சட்ட அறிவை தூசி தட்ட ஒரு வாய்ப்பு.வெறும் வாயை மெல்வோருக்கு அவல்'' என்றார்.









