Thalaippu-news
பதாகை
RSS ஓடை

அரசியல்

(2 வாக்குகள், சராசரியாக 5.00 ற்கு 5)

 

அழகிரி மகன் தயாநிதியின் திருமணம் மதுரையில் நாளை நடைபெறுகிறது. முன்னதாக இன்று இரவு தயாநிதி , அனுஷா தம்பதிகளின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது (பிரம்மாண்டமாக).

தனது பேரனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதி இன்று மாலை மதுரை வந்தார் அவருடன் அவரது மனைவி தயாளு அம்மாளும் உடன் வந்தார்கள். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் உள்ளார் எனபது கூடுதல் செய்தி.

ஒரு திருமண நிகழ்ச்சியை அரசியல் பகுதியில் பிரசுரிக்கிறோம் என்று வியக்க வேண்டாம், இது ஒரு சாதாரண பாமரனின் திருமணம் அல்ல. தமிழ்நாட்டின் முதல் குடும்பத்தின் ஒரு திருமண நிகழ்வு ஆகும். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரின் மகனும், தமிழக முதல்வரின் பேரனும், துணை முதல்வரின் அண்ணன் மகனும், கூடுதலாக மத்திய மந்திரியின் மருமகனுமான தயாநிதியின் திருமணமாகும். இதனால் அனைத்து அரசியல் பெரிய தலைகளும் மதுரையில் முகாமிட்டுள்ளன எனபது தன இதற்கு முக்கிய காரணம். முன்னால் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா முக்கிய விருந்தாளி எனபது குறுப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கியமானவர்களில் சிலர் பின்வருமாறு, மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி, ஆ.ராசா, கனிமொழி, குலாம்நபி ஆசாத், ஜி.கே.வாசன், தயாநிதி மாறன், மற்றும் பலர். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தியாகும். மற்றுமொரு ஆச்சர்யம் என்னவென்றால் முதல்வரின் மகனும் மத்திய அமைச்சருமான மு.க அழகிர ஆங்கில உடையில் பளிச்சிட்டார் என்பது தான்.

 

(3 வாக்குகள், சராசரியாக 4.67 ற்கு 5)

 

தி.மு.க வின் ஆணைப்படி தகவல் தொடர்பு அமைச்சர் ஆ ராசா இன்று பதவி விலகினார்.

இந்தியா மட்டும் அல்ல உலகத்தில் அரசியல் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.. அதுவும் தேர்தல் காலங்களில் அதன் உக்கிரம் மிக அதிகமாகவே இருக்கும்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவை பதவிலகக் கோரி பல தரப்பட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். 2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சுமார் ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறு ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக ஏகோபித்த குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.

ஆ. ராசா ஊழலில் ஈடுபட்டாரோ இல்லையோ.. ஆனால் இதை வைத்து மிகப்பெரும் அரசியல் நாடகமே அரங்கேறியது ., அரங்கேறிக் கொண்டிருக்கிறது!. தி.மு.க ஆட்சிக்கு பல நெருக்கடிகள் இருந்தாலும் ஒருசிலவற்றை இல்லை என்று மறுத்தும், ஒரு சிலவற்றை உவமைகள் மூலமாகவும் சமாளித்து வருகிறது தி.மு.க. இது போதாதென்று ஆ.ராசாவின் விவகாரம் மேலும் தர்மசங்கடமான நிலையை தி.மு.கவிற்கு ஏற்படுத்திவிட்டது.

தி.மு.க மற்றும் காங்கிரசின் உறவை சிதைக்க பலவகையான நிகழ்வுகள் அரங்கேறின. குறிப்பாக சில நாட்களுக்கு முன்னால் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளரும் தற்போதைய எதிக்கட்சித் தலைவருமான செல்வி ஜெ. ஜெயலலிதா ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்தால் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக மறைமுகமாக காங்கிரசிற்கு அழைப்பு விடுத்தார், இது தி.மு.க தரப்பிலும் டெல்லியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சிறிது கலக்கம் தி.மு.கவிற்கு ஏற்பட்டாலும் டெல்லியில் இருந்த பதிலில் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானர்கள். இதனால் தான் "அ.இ.அ.தி.மு.கவிற்கு கதவு மூடிவிட்டது, என்ன நடக்கும் என்று எங்களுக்கு தான் தெரியும்" என்று திரு.மு.கருணாநிதி செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு தனது பதிலை கூறினார்.

இருப்பினும் காங்கிரஸ் தலைவரான திருமதி. சோனியா காந்தியின் நேரடி பதில் எதுவும் வரவில்லை மேலும் பிரதமர் திரு.மன்மோகன் சிங் நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது "முடிவு தலைமை எடுக்கும், என்னால் எதுவும் கூற முடியாது" என்று நழுவிக்கொண்டார். இதனால் சிறிது கலக்கம் தி.மு.கவிற்கு இருந்து கொண்டே இருந்தது.

இருப்பினும் "எந்த தவறையும் நான் செய்யவில்லை பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று ஆ.ராசாவும், "அவர் எதற்காக பதவி விலக வேண்டும், அவர் தவறே செய்யாத போது அவரைப்பற்றி மத்திய அரசிடம் நான் ஏன் பேச வேண்டும் " என்று கருணாநிதியும் நிருபர்களுக்கு பதிலளித்தார்கள். இந்நிலையில் சிறிது பரபரப்பைக் கூட்ட அல்லது இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தி.மு.க., அமைச்சர் ஆ.ராசாவை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட ஆ.ராசா தனது பதவியை துறப்பதாக அறிவித்தார். தனது பதவி விலகளுக்கலான கடிதத்தை பிரதமரிடம் அவர் வழங்கினார்.

"எனது தலைமை என்னை பதவி விலகும்படி ஆணையிட்டுள்ளது, எனது தலைமையின் கட்டளையை நிறைவேற்றவே எனது பதவியை துறக்கின்றேன், எந்த தவறுக்கும் நான் சொந்தக்காரன் இல்லை " என்று அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

தி.மு.க. தரப்பில் கூறும் போது " நாடாளுமன்ற நடவடிக்கைகள் நன்றாக நடக்கவே அவரை பதவி விலகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, 1999 ஆண்டு இருந்த நடைமுறையை பின்பற்றியே அமைச்சர் ராசா தனது கடைமைகளை நிறைவேற்றினார். அவரின் தவறுக்காக இந்த பதவி விலகல் இல்லை" என்று அறிக்கை விட்டுள்ளனர்.

இன்னும் என்னவெல்லாம் நாடகங்கள் நிறைவேறும் என்று தெரியவில்லை. தமிழகத்திலும் தேர்தல் நெருங்குகின்றது .... பரபரப்புகள் ஆரம்பமாகின்றன.

 

(1 வாக்கு, சராசரியாக 5.00 ற்கு 5)

 

காங்கிரசுடன் தேசிய அரசியலில் கூட்டணி வைத்துக்கொள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தலைவரும் முன்னால் முதல்வருமான செல்வி.ஜெ. ஜெயலலிதா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர்," 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அ. ராசா மீது இரண்டரை ஆண்டிற்கு முன்னால் இருந்தே குரல் கொடுத்த முக்கியத் தலைவர்களில் நானும் ஒருவர் என்பதை இங்கே நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். அமைச்சர் அ. ராசா மீதான குற்றச்சாட்டு என்ன?, 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் என்ன? என்று மக்களுக்கு தெரிந்து கொள்ள இவ்வளவு கால அவகாசம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலை வேறு 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி குழந்தை முதல் பெரியவர் வரை ஏன் சாதாரண மனிதர்கள் கூட தெரு முனையில் விவாதிக்கும் அளவிற்கு அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

சுமார் ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் ஊழல் (ரூ.17 ,60 ,00 ,00 ,00 ,000) மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அ. ராசாவின் தனிப்பட்ட சுதந்திரத்தின் காரணமாகவே நிகழ்ந்துள்ளது. இது வரை அவர் மீது தி.மு.க.வோ அல்லது மத்தியில் ஆளும் காங்கிரசோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் காங்கிரசை ஊழலைக்கண்டு மன்னிப்பவர்கள் என்று நம்மால் கூற இயலாது காரணம் சுரேஷ் கல்மாடி, அசோக் சவான் போன்றோர்களின் மீதுள்ள குற்றங்களின் காரணமாக அவர்களின் பதவியை காங்கிரஸ் மேலிடம் பறித்தது இதிலிருந்து அவர்களின் பொறுப்பு சரியாக புலனாகிறது. மேலும் இவை அனைத்தையும் விஞ்சும் வகையில் ஊழலில் ஈடு பட்டுள்ள அமைச்சர் அ. ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் காரணம் நன்றாகவே புரிகிறது. அமைச்சர் அ. ராசா மீது நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் தி.மு.க. மத்தியில் இருந்து விலக நேரிடும் இதனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் இடைதேர்தலை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் பயப்படுகிறது.

இதில் நான் ஒன்று உறுதியளிக்கிறேன் அதாவது தி.மு.க., மத்தியில் இருந்து விலக நேரிடும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பதினெட்டு சீட்டு தேவைப்படும். எனவே எங்களிடம் ஏற்கனவே உள்ள ஒன்பது சீட்டுக்கள் மற்றும் எனது நட்பு கட்சிகளின் சீட்டுக்களையும் சேர்த்து பதினெட்டிற்கும் சற்று மேலாக என்னால் வழங்க முடியும். அமைச்சர் அ. ராசா மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தால் நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம் என்று இங்கு கூற நான் கடமைப்பட்டுள்ளேன். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது மேலும் இந்தியாவும் இடைதேர்தலை சந்திக்க நேரிடாது.

அனைத்து நடவடிக்கைகளுமே பிரதமரின் கவனத்திற்கு பினனால் தான் எடுக்கப்பட்டது என்று அமைச்சர் அ. ராசா மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் இதனால் பிரதமரின் பெயருக்கும் களங்கம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரசின் நற்பெயர் கெடாமல் இருக்க அமைச்சர் அ. ராசா மீது நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி காங்கிரசிற்கு இல்லை. மேலும் அமைச்சர் அ. ராசாவே முன்வந்து தாமாகவே பதவி விலகுவார் என்றும் எதிர்பார்க்க முடியாது. நீதிமன்றமும் மத்திய முதன்மை கணக்கு இயக்கமும் பகிரங்கமாக நடவடிக்கை எடுக்கும்படி கூறிய பிறகும் மத்திய அரசு காலம் கடத்துவது ஆட்சிக்கு ஆபத்து என்பதை தவிர வேறேதும் இருப்பின் அதைப்பற்றி எனக்கு தெரியாது.

இவ்வாறு நாங்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்தும் காங்கிரஸ் அமைச்சர் அ. ராசா மீது நடவைக்கை எடுக்கவில்லை என்றால், இது மக்களின் போராட்டமாக உருவெடுக்கும். அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட நேரிடும் அதனை நானே முன்னின்று வழிநடத்துவேன். வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே எனது தலையாய கடமை ஆகும், இருப்பினும் இந்த இந்திய நாட்டின் குடிமகளாகிய மற்றும் நாட்டின் பொறுப்பான அரசியல் கட்சித்தலைவர் என்ற முறையில் நான் இவ்வளவு பெரிய ஊழலைக்கண்டு அமைதியாக இருக்க முடியாது. " என்று செல்வி.ஜெ. ஜெயலலிதா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் " மத்தியில் எனது பங்கு என்ன என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும், மத்தியில் எனது பங்கை பற்றி கேட்பதனால் எனது உணர்வுகளை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு மத்தியில் முக்கிய பங்கு கிடைக்கும் பட்சத்தில் எனது முதல் வேலையாக நாட்டின் பாதுகாப்பிற்கு அதன் தேவைகளை கவனிப்பேன். தற்போது உலகின் மிகப்பெரிய ராணுவமாக சீனா திகழ்கிறது, அதனை எதிர்க்க நமக்கு வலிமை உள்ளதா? என்னைக்கேட்டால் இல்லை என்றே கூறுவேன்.

தற்போது தொடர்ச்சியாக சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து வந்து கொண்டிருக்கும் மிரட்டல்களை நாம் மென்மையாக கையாண்டு கொண்டிருக்கிறோம், திருமதி.இந்திரா காந்தி போன்றவர்கள் இப்போது இருந்திருந்தால் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மை சீண்டக்கூட செய்திருக்காது. மேலும் மதிய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு எப்போதும் ஒரு பங்கு அளித்து அவர்களை ஊக்கப்படுத்தும் செயல்களில் மத்திய அரசு ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். " இவ்வாறு கூறி செல்வி.ஜெ. ஜெயலலிதா தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.

செல்வி.ஜெ. ஜெயலலிதா தனது நிலையை பற்றி இவ்வாறு கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் மிகப்பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தி.மு.க. எங்களது பிரதான கூட்டணிக்கட்சி, அவர்களுடன் எங்களது கூட்டணி வலுவாக உள்ளது என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்னும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. டெல்லியில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பேட்டி எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனபது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பதிலில் தான் உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதே உண்மை.

முன்னதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை முதல்வர் கருணாதியின் மகளும் மத்திய அமைச்சருமான கனிமொழி சந்தித்து அமைச்சர் அ. ராசா பற்றி விவாதித்ததாக தெரிகிறது.

 

(1 வாக்கு, சராசரியாக 4.00 ற்கு 5)

 

900 கோடி செலவு ஒரு நாளைக்கா?.... அம்மாடியோவ் !!!

ஆம் ஆச்சரியப்படாதீர்கள், அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர், மேலும் இரண்டாவது மிக உயர்த்த அமெரிக்க அதிபர் (முதலில் இருப்பவர் அபிரகாம் லிங்கன் 6.4, இவர் 6.2 ) என பல சிறப்புகளைக்கொண்ட பராக் ஒபமாவின் ஒரு நாள் செலவுதான் 900 கோடி அதாவது அமெரிக்க மதிப்பில் 200 மில்லியன் டாலர்கள். எங்கே என்று இவ்வளவு செலவு செய்கிறார் என்று பார்க்கிறீர்களா.... வேறு எங்கும் இல்லை இந்தியாவில் தான்.

கூடுதல் செய்தி அவர் செலவு செய்ய வில்லை அவருக்காக செலவு செய்யப்படுகிறது. ஆம் , அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக வரும் சனிக்கிழமை (6.11.2010) அன்று இந்தியா வருகிறார். சுமார் இரண்டு கோடி மதிப்பிலான மிக ஆடம்பரமான அனைத்து பாதுகாப்புகளும் நிறைந்த காரில்தான் இந்த மூன்று நாளும் பயணம் செய்யவிருக்கிறார். முதலில் சனிக்கிழமை மும்பை வந்து இறங்கும் அவர் அடுத்த நாள் தலைநகரான டெல்லிக்கு பயணமாகிறார். நமது பாராளுமன்றத்தில் சிறிய உரையும் நிகழ்த்த விருக்கிறார். அவருக்கு பாதுகாப்பு வழங்க சுமார் மூவாயிரம் கனவான்கள் ஈடுபடப்போகிறார்கள். இதில் ரகசிய உளவாளிகள், அமெரிக்க பாதுகாப்புப்படை மேலும் முக்கிய புள்ளிகளும் அடக்கம்.

ஒரு நாள் இந்தியாவில் தங்க அவருக்காக செலவிடு தொகைதான் 900 கோடி. அப்படியென்றால் சுமார் 3600 கொடிகள் செலவழிக்கப்பட இருக்கிறது. சிறிய ஆறுதல் செய்தி இவையனைத்தும் இந்தியா அரசால் செலவிடப்படவில்லை என்பது தான் அது. இத்தொகையில் இந்தியாவின் பங்கு சிறிதுதான். மிகுந்த பொருட்செலவை செய்து ராஜ மரியாதையுடன் இந்தியாவை சுற்றிப்பார்க்க வர்கிறார் ஒபாமா.

 



தமிழ் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும், இலங்கை அரசின் நடவடிக்கை அதிருப்தி தருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். அவர் கூறியதாவது,""இளையான்குடி அருகே சூராணத்தில் தி.மு.க., கூட்டத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது. தமிழக போலீசார், அவர்களை இயக்கியவர்களை பிடிக்கவேண்டும். வடகிழக்கு மாநிலத்தில் பிரிவினைவாதிகள் வன்முறைக்கும், ஏழு மாநிலங்களில் பரவியுள்ள நக்சலைட்டுகளுக்கும் உள்துறை அமைச்சகம் முற்றுப்புள்ளி வைக்கும்

தமிழகத்தில் நக்ஸலைட் இயக்கம் இல்லை. ஆங்காங்கே சில அனுதாபிகள் இருக்கலாம். ஜூலை 1ம் தேதி என்.எஸ்.ஜி.,அமைப்பு துவக்கப்படும். கடலோர பாதுகாப்பிற்கு செப்30ம் தேதிக்குள் 28 படகுகள் தரப்படும். சிவகங்கை தொகுதியில் எனது வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்திருப்பது, என் சட்ட அறிவை தூசி தட்ட ஒரு வாய்ப்பு.வெறும் வாயை மெல்வோருக்கு அவல்'' என்றார்.

 

 

Please login to be able to chat.

விளம்பரம்

ஒரு நிமிடம் கவனியுங்கள்

உங்கள் ஓட்டு எந்த கட்சிக்கு?

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2