பதாகை
பிரதமர் நாளை தாய்லாந்து பயணம்
வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2009 01:22   
(1 vote, average 5.00 out of 5)

 

தாய்லாந்தில் நடைபெற உள்ள ஏழாவது இந்திய - தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) மற்றும் நான்காவது கிழக்கு - ஆசிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் நாளை (23ம் தேதி) செல்கிறார்.

தாய்லாந்து நாட்டில், வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் ஏழாவது இந்திய - தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மற்றும் நான்காவது கிழக்கு - ஆசிய மாநாடுகள் நடைபெற உள்ளன. உலக பொருளாதார நெருக்கடியை பாதுகாப்பான சூழலில் சமாளிக்க, ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மன்மோகன் சிங், இம்மாநாடுகளில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் போது, வரும் 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் வென்ஜியாபோவை சந்தித்து பேச உள்ளார். அதே போன்று மற்ற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, இரு நாட்டு நல்லுறவுகள் குறித்து விவாதிப்பார் என

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக கிழக்கு பிரிவுச் செயலர் என்.ரவி கூறியதாவது: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன பிரதமர் இடையேயான சந்திப்பின் போது, அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்படும். "ஆசியான்' மாநாட்டில், சேவை மற்றும் முதலீட்டு துறையில் தாராள வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்படும். உலக நாடுகள் பலவும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டாலும், ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளன. இவ்வாறு ரவி கூறினார்.

 

கருத்து (0)

Subscribe to this comment's feed

கருத்தை கூறவும்

சிறியது | பெரியது
security image
மேலே காணப்படும் எழுத்துக்களை நிரப்புக

busy
 

விளம்பரம்