கோதுமை மவை உப்பு கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.
காளிபிளவர், உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, தூள் வகைகள் எல்லாம் சேர்த்து கலக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, இந்த கலவையை போட்டு நன்றாக வதக்கவும்.
காளிபிளவர் பாதி வதங்கியதும், தண்ணீர் தெளித்து மூடி போட்டு நன்றாக வேக விடவும்.
தண்ணீர் சுத்தமாக வற்றி கலவை திக் ஆனதும் எடுக்கவும்.
வழக்கமாக சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டி, உள்ளே சிறிது காளிபிளவர் கலவை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தி போல் (சற்று கனமாக) தேய்த்து, மேலே நெய் தடவி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். (நெய்'க்கு பதிலாக எண்ணெயும் தேய்கலாம்)
முதலில் பாகற்காயை சற்று கணமான வில்லைகளாக நறுக்கி அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்து பிசறி பத்து நிமிடம் வைக்கவும்.
பூண்டுப் பல்லை தட்டி வைக்கவும்.
தக்காளியை நான்காகவும், ப. மிளகாய், வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கவும்
புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை கழுவி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சோம்புத் தூள், இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, சோம்பு வெடிக்க விட்டு வெங்காயம், பூண்டு, ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, சிவந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
மூன்று நிமிடம் கழித்து காய் கலவையை போட்டு வதக்கவும்.
ஐந்து நிமிடம் நன்கு வதக்கி புளிக் கரைசலை ஊற்றவும்.
பத்து நிமிடம் நன்கு கொதித்து காயும் நன்றாக வெந்தவுடன் வெல்லம் தட்டிப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.