சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்திக்கு வரி சலுகை வழங்க கூடிய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய மரபுசார எரிசக்தி அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
உணவு தானியம், காய்கறி ஆகியவைகளுக்கு வாட் வரியில் இருந்து விலக்கு அளித்து ஜார்கன்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த ஆண்டு வரை அமலில் இருக்கும்.
பணவீக்கம் எதிர்மறையாக குறைந்துள்ளது, எப்போதும் இல்லாதது என்று கருத்து தெரிவித்துள்ள நிதி துறை செயலாளர், இதனால் அரசின் பொருளாதார கொள்கை மாறாது என்று கூறினார்.