
தாமரைத்தண்டு - பேபிகார்ன் மஞ்சூரியன் சுலப முறை
தேவையானவை:
தாமரைத் தண்டுகள் - 1கப்
பேபிகார்ன் துண்டுகள் - 1கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பூண்டு பல் - 10
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு
நறுக்கிய குடமிளகாய் - தேவையான அளவு
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன்ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தாமரைத்தண்டு மற்றும் பேபிகார்னையும் மெல்லியதாக நறுக்கி தனித்தனியே உப்பு, சர்க்கரை தூவி கிளறவும்.
சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனித்தனியே பொரித்தெடுக்கவும்.
இன்னொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தாள், பூண்டு, வெங்காயம், குடமிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
வற்றலை எண்ணெயில் போட்டு கார்ன்ப்ளார் மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும்.
அடுப்பை அதிக தீயில் வைத்துக் கிளறி, பொரித்து வைத்திருக்கும் தாமரைத்தண்டு மற்றும் பேபிகார்ன் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும்.
இது சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்.


