Thalaippu-news
பதாகை
RSS ஓடை

சைவம்

(2 வாக்குகள், சராசரியாக 5.00 ற்கு 5)

 

தாமரைத்தண்டு - பேபிகார்ன் மஞ்சூரியன் சுலப முறை

 

 

 

 

 

தேவையானவை:

தாமரைத் தண்டுகள் - 1கப்
பேபிகார்ன் துண்டுகள் - 1கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பூண்டு பல் - 10
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு
நறுக்கிய குடமிளகாய் - தேவையான அளவு
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன்ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

தாமரைத்தண்டு மற்றும் பேபிகார்னையும் மெல்லியதாக நறுக்கி தனித்தனியே உப்பு, சர்க்கரை தூவி கிளறவும்.

சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனித்தனியே பொரித்தெடுக்கவும்.

இன்னொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தாள், பூண்டு, வெங்காயம், குடமிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

வற்றலை எண்ணெயில் போட்டு கார்ன்ப்ளார் மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும்.

அடுப்பை அதிக தீயில் வைத்துக் கிளறி, பொரித்து வைத்திருக்கும் தாமரைத்தண்டு மற்றும் பேபிகார்ன் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும்.

இது சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

 

 

(1 வாக்கு, சராசரியாக 1.00 ற்கு 5)
தேவையானப் பொருட்க‌ள் முருங்கைக்காய் - 3 தக்காளி - 2 வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு மேசைக்கரண்டி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சோள மாவு எலுமிச்சை பழம் செ‌ய்முறை முருங்கைக்காயை நறுக்கி கழு‌வி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். தக்காளி, வெங்காயத்தையு‌ம் நறுக்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வெ‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். இ‌ஞ்‌சி, பூ‌ண்டை ‌விழுதாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். குக்கரில் நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அள‌வி‌ற்கு உப்பு, கரம் மசாலா தூள் ஆகியவற்றை போட்டு 2 1/2 ட‌ம்ள‌ர் தண்ணீர் ஊற்றி மூடி சுமா‌ர் 5 நிமிடம் வேக விடவும். ந‌ன்கு வெ‌ந்தது‌ம் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் வேகவைத்த காய்கறிகளை போட்டு அதில் உள்ள சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ‌பி‌ன்ன‌ர் சூ‌ப் ப‌ரிமாறுவத‌ற்கு மு‌ன்பு சூப்பை சுட வை‌த்து கொதித்ததும் மேலே கொத்துமல்லி தழை, புதினா ‌மிளகு தூ‌ள் தூவவும். பரிமாறும் போது மேலே எலுமிச்சை சாறை பிழிந்து பரிமாறவும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
சூப் வகைகளை தயாரித்து உடனே சூடாக உண்பது உடலுக்கு சுறுசுறுப்பையும் ஆரோக்யத்தையும் அளிக்கும். தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் 225 கிராம் வெள்ளை பூசணிக்காய் : 225 கிராம் வெங்காயம் : 3 உருளைக்கிழங்கு : 2 சோள மாவு : தேவைக்கேற்ப வெண்ணெய் : 1 தே‌க்கர‌ண்டி உப்பு, மிளகுத்தூள் : தேவைக்கேற்ப செய்முறை: கா‌ய்க‌றிகளை பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம். வாண‌லி‌யி‌ல் வெண்ணெயை போ‌ட்டு அடுப்பில் வைத்து, ‌சி‌றிது சோ‌ம்பு சே‌ர்‌த்து தா‌ளி‌க்கவு‌ம். ‌பிறகு பொடியாக நறு‌க்‌கிய முட்டைகோஸ், பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவைகளை போ‌ட்டு ந‌ன்கு வத‌க்கவு‌ம். ‌பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் வேக விடவும். ந‌ன்கு வெ‌ந்தது‌ம், ‌சி‌றிது சோள மாவை த‌ண்‌ணீ‌ரி‌ல் கரை‌த்து சூ‌ப்‌பி‌ல் ஊ‌ற்‌றி ‌கிள‌றி ‌விடவு‌ம். ச‌‌ரியான அள‌வி‌ற்கு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி சூடாக பரிமாறவும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
காளிபிளவர் என்றாலே தனி ருசிதான். தேவையானப் பொருட்கள் காளிபிளவர் - 1 தேங்காய் துருவல் - 1 க‌ப் மஞ்சள் தூள் - 1 ‌சி‌ட்டிகை கரம் மசாலாத் தூள் - ஒரு தே‌க்கர‌ண்டி மிளகாய் தூள் - ஒரு தே‌க்கர‌ண்டி பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 பூண்டு பற்கள் - 6 கறிவேப்பிலை எண்ணெய் - 100 ‌மி‌ல்‌லி தேவையான அளவு உப்பு செய்முறை காளிபிளவரை சுத்தம் செய்து, சிறிது உப்பு, மஞ்சள் தூ‌ள் போட்டு, வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை, க‌றிவே‌ப்‌பிலையை பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டை நசுக்கிக் கொ‌ள்ளவு‌ம். காளிபிளவர் வெந்தவுடன் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை அனைத்தையும் போட்டு, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், ‌சி‌றிது ‌உ‌ப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள காளிபிளவர் கலவையை கொட்டி நன்றாக வறுக்க வேண்டும். கடைசியாக துருவிய தேங்காயை கொட்டி சுமார் 3 நிமிடங்கள் வறுக்க வேண்டும். பொரபொரப்பான காளிபிளவர் புட்டு கலக்கலாக இருக்கும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
சாதாரண இட்லியை சாப்பிட்டு சலித்து போனவர்களுக்கு வெஜிடபிள் இட்லியை சமைத்துக் கொடுத்துப் பாருங்கள். ருசியாகவும் இருக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தேவையானவை: இட்லி மாவு - 2 கப் பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப் தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் மல்லித்தழை - சிறிதளவு உப்பு - ஒரு சிட்டிகை தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - 2 டேபிள்டீஸ்பூன் இஞ்சி - ஒரு துண்டு பஞ்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயம் - ஒரு சிட்டிகை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இல்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.






முழு செய்தியை படிக்க
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2