| தக்காளி இறால் மசாலா
|
| சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:43 |
|
| சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையான தக்காளி இறால் மசாலா சமைப்பது எப்படி? சமைத்துப் பாருங்கள். ருசித்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: தக்காளி - 200 கிராம் வெங்காயம் - 200 கிராம் இறால் - 1/4 கிலோ பச்சை மிளகாய் - 4 மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1 குழிக்கரண்டி கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க உப்பு - தேவையான அளவு செய்முறை: தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை அரிந்து வையுங்கள். இறாலை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். இதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். கலவை நன்றாக வதங்கியவுடன் வேக வைத்த இறாலைப் போட்டுக் கிளறி இறக்குங்கள். தக்காளி இறால் மசாலா ரெடி.

|
|
| சிக்கன் கோலா
|
| சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:43 |
|
| எப்போதும் சிக்கனை ஒரே மாதிரியாக செய்து சலிப்படைந்தவர்கள் சிக்கன் கோலா செய்து சாப்பிட்டு மகிழலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் 1/4 கிலோ வெண்ணெய் 40 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு மக்காச்சோளம் மாவு 4 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு பாலாடை சிறிதளவு செய்முறை : மிக்ஸியில் முட்டைகளின் மஞ்சள் கரு மற்றும் சுத்தம் செய்து சதைப் பகுதியை மட்டும் எடுத்த சிக்கனை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன், வெண்ணெய், மிளகு தூள், மக்காச்சோளம், உப்பு, பாலாடை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையை எடுத்து கோலி குண்டுகள் அளவுக்கு உருட்டிக் கொள்ளவும். கால் கிலோ சிக்கனுக்கு 20 உருண்டை வரும். இதனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். கோலா பொன்னிறமாக இருக்கும் படி பார்த்து எடுக்க வேண்டும். சூடான சிக்கன் கோலா ரெடி!

|
|
| மீன் கட்லெட்
|
| சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:43 |
|
| தேவையான பொருட்கள்: மீன் : 500 கிராம் ரொட்டி : 2 ஸ்லைஸ் எலுமிச்சம்பழம் : 1/4 பச்சை மிளகாய் : 5 கிராம் வெங்காயம் : 200 கிராம் முட்டை : 1 உப்பு : தேவையான அளவு எண்ணெய் : வறுக்க தேவையான அளவு வெள்ளரிக்காய் : 30 கிராம் தக்காளி : 50 கிராம் கருவேப்பிலை : கொஞ்சம் பிரட் தூள் - சிறிதளவு செய்முறை: மீனை நன்றாக சுத்தம் செய்து வேக வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரட் ஸ்லைஸை தண்ணீரில் முக்கி, நன்கு பிழிந்து கொள்ளவும். பிழிந்து வைத்திருக்கும் பிரட்டுடன் வெங்காயம், பச்சை மிளகாய், வெந்த மீன், எலுமிச்சை சாறு சேர்த்து, உப்பு போட்டு கட்லெட்டுகள் செய்து கொள்ளவும். முட்டையில் சிறிது உப்பு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும். கட்லெட்டை முட்டையில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து தோசை கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு இரு பக்கமும் நன்கு வறுபட்டவுடன் இறக்கவும். வறுபட்ட கட்லெட்டை வட்டமாக சீவிய வெள்ளரிக்காய், தக்காளியுடன், கறிவேப்பிலையும் வைத்து அலங்கரிக்கவும்.

|
|
| மீன் துவட்டல்
|
| புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:33 |
|
| மீன் துவட்டலை ஒரு முறை சமைத்து உண்டால் போதும், எப்போதும் அப்படி தான் வேண்டும் என்று வீட்டில் அனைவரும் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். சமைப்பதும் எளிது. தேவையான பொருட்கள்: மீன் : 200 கிராம் மிளகாய் வற்றல் : 10 தனியா : 2 ஸ்பூன் மிளகு : 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி : 1/2 ஸ்பூன் உப்பு : தேவைக்கேற்ப புளி : சிறிதளவு தேங்காய் எண்ணெய் : 50 கிராம் செய்முறை: மீனை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மிளகாய் வற்றல், தனியா, மிளகு, உப்பு இவைகளை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவுடன் சிறிது புளியை கட்டியாக கரைத்து ஊற்றவும். மஞ்சள் பொடியையும் போடவும். இக்கலவையுடன் மீன் துண்டுகளை போட்டு அடுப்பை நிதானமாக எரிய விடவும். மீன் சிறிது வெந்தவுடன் இக்கலவையுடன் எண்ணெய் ஊற்றவும். சற்று கிளறிய பின், மீன் நன்றாக வெந்துள்ளதா என்று பார்த்து, இறக்கி பரிமாறவும்.

|
|
| இறால் வறுவல்
|
| புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:33 |
|
| இறால் உணவு வகையில் இது ஒரு புது மாதிரி தேவையான பொருட்கள் தோல் உரித்த இறால் - 1 கிண்ணம் உப்பு - தேவையான அளவு மிளகாய் பொடி - 3 தேக்கரண்டி மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு எலுமிச்சை சாறு - ஒரு சில துளிகள் செய்யும் முறை இறாலை தோல் உரித்து நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இறாலை இந்த கலவையில் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் ஊறவிட்டுவிடவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து காய்ந்ததும், எண்ணெய் ஊற்றி அதில் இறால் கலவையைப் போடவும். நன்கு திருப்பிவிட்டுக் கொண்டே இருக்கவும். இறால் நன்கு சுருண்டு வறுபட்டதும் இறக்கிப் பரிமாறவும். சாம்பார் சாதத்திற்கு மிகவும் ருசியாக இருக்கும்.

|
|
|
|
|
பக்கம் 1 - 6 |