| ஓம பிஸ்கெட்
|
| சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:42 |
|
| குழந்தைகள் விரும்பும் வடிவங்களில் இருப்பதால் அவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்: மைதாமாவு - 2 கப் பொட்டு ஓமம் - 4 ஸ்பூன் மிளகு - 1 ஸ்பூன் தூள் உப்பு - 1 1/2 ஸ்பூன் வெண்ணெய் - 1 எலுமிச்சை அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: மிளகை நன்றாக தூள் செய்து கொள்ளவும். அதோடு மற்ற பொருட்களை சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். பூரிக்கு இடுவது போல தேய்த்து மான், குருவி, மீன், முயல் பொம்மை வடிவ அச்சுகளால் வெட்டிக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி அதில் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

|
|
| ராகிபால் அல்வா
|
| சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:42 |
|
| உடலுக்கு ஆரோக்கியமான கேழ்வரகை பயன்படுத்தி ராகிபால் அல்வா செய்து வீட்டினரை அசத்துங்கள். தேவையான பொருள்கள்: ராகி - 2 கப் காய்ச்சிய பசும்பால் - 1 கப் அஸ்கா சர்க்கரை - 2 கப் உருக்கிய நெய் - 6 ஸ்பூன் முந்திரிப் பருப்பு - 6 ஏலப்பொடி - 1/2 ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதல் நாள் இரவு கேழ்வரகை ஒரு பாத்திரத்தில் போட்டு, கொதிக்கும் தண்ணீரை அது மூழ்கும் வரை ஊற்றி ஊற வைக்கவும். மறுநாள் நீரை வடித்து விட்டு அதில் வெதுவெதுப்பாக நீர் ஊற்றி அரைத்து, ஒரு மஸ்லின் துணியில் பாலை வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் காய்ச்சிய பசும்பால், வடிகட்டிய ராகி பால் இரண்டிடையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியாகி வருகையில், சர்க்கரை சேர்த்துக் கரைந்தவுடன் உருக்கிய நெய் சேர்த்துக் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருள வரும்போது ஏலப்பொடி சேர்த்து விளிம்பு வைத்த ஒரு தாம்பாளத்தில் அல்வாவை ஊற்றி சமமாகப் பரப்பி, மேலே முந்திரி சீவலைப் பரவலாகத் தூவி விடவும். இதை சற்றே ஆறியவுடன் பெரிய துண்டுகளாக கட் செய்து பரிமாறவும்.

|
|
| மூக்கடலை மசாலா
|
| சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:42 |
|
| வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப் வெங்காயம் - ஒன்று பெரியது தக்காளி - இரண்டு பச்சைமிளகாய் - ஒன்று மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி பூண்டு - பத்து பல் எண்ணை - இரண்டு தேக்கரண்டி நெய் - இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி கொத்துமல்லி - சிறிது செய் முறை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் குக்கரில் மஞ்சள் தூள், உப்பு, அரை தேக்கரண்டி மிளகாய் துள், ஐந்து பல் பூண்டு பொடியாக நறுக்கி போட்டு நான்கு விசில் விட்டு வேக விடவும். ஒரு தேக்கரண்டி மூக்கடலையை மிக்ஸியில் திரித்து போட்டால் மூக்கடலை ஒன்றாக குழைந்து வரும். வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். எண்ணையை காயவைத்து சீரகம் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். இதில் லேசாக தண்ணீர் ஊற்றி வேகவைத்த கொண்டைக்கடலையைப் போட்டு கொதிக்க வைத்து, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

|
|
| பீட்ரூட் சூப்
|
| ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூன் 2009 09:54 |
|
| காய்களில் பீட்ரூட் அதிகமான சத்துள்ளது. ஆகவே அதை சூப் செய்து சாப்பிட்டால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தேவையான பொருட்கள்: பீட்ரூட் பெரியது : 1 சோள மாவு : 1 டீஸ்பூன் வெங்காயம் : 1 (பொடிப் பொடியாக நறுக்கியது) வெண்ணெய் : 1 டீஸ்பூன் வினிகர் : 1 டீஸ்பூன் புது க்ரீம் : 4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு : 2 சொட்டு உப்பு, மிளகுத்தூள் : தேவைக்கேற்ப செய்முறை: பீட்ரூட்டை துருவி நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெண்ணெயை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கவும். சோளமாவை சேர்த்து மறுபடியும் வதக்கவும். பீட்ரூட்டையும் உப்பையும் போட்டு, நன்கு மசித்துவிடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். புதிய க்ரீமை, எலுமிச்சை சாறுடன் நன்கு அடித்து சேர்க்கவும். வினிகர், தேவையான அளவு மிளகுப்பொடி சேர்த்து சூடாக பரிமாறவும்.

|
|
| எங்கேனும் செல்லும்போது தண்ணீர்விடாமல் தக்காளி தொக்கு செய்து எடுத்துச் சென்றால் 2 நாட்கள் கூட கெடாமல் இருக்கும். தேவையானப் பொருட்கள் தக்காளி - 5 தனியா, மிளாகய் தூள் - தலா 1 தேக்கரண்டி பூண்டு - 5 இஞ்சி - சிறிய துண்டு நல்லெண்ணெய் - 1/4 கப் உப்பு மஞ்சள் தூள் - சிட்டிகை கறிவேப்பிலை, கொத்து மல்லி செய்முறை : இஞ்சி, பூண்டை தோல் சீவி நசுக்கி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து அதில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளிக்கவும். நறுக்கிய வெங்கயாம், தக்காளியை நன்கு வதக்கிக் கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு கிளறி விடவும். தக்காளி தொக்கிற்கு எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விட வேண்டும். நல்ல சிவந்த நிறத்தில் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை, கொத்து மல்லி தூவி சுவையான இந்த தக்காளி தொக்கை எந்த விதமான காலை உணவிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

|
|
|
|
|
பக்கம் 1 - 7 |