தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பல்வேறு சுற்றுலாப் பயணத் திட்டங்களை வகுத்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சுற்றுலா செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழத்தைத் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
இன்னும் சில நாட்களில் சென்னை சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், விமான நிலையம் போன்ற இடங்களில் சுற்றுலா நட்பு வாகனம் என்ற ஆட்டோக்கள் வலம் வருவதைப் பார்ப்பீர்கள்.
கோடை கொளுத்திக் கொண்டிருக்கும் போது பனி மலையா? அதுவும் சென்னையிலா என்று ஆச்சரியக் கடலில் மூழ்க வேண்டாம். உண்மைதான். பனி மலையில் நடக்க விரும்பினால் சென்னைக்கு வரலாம். கோடை கால சிறப்பு நிகழ்ச்சியாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சென்னை தீவுத்திடலில் செயற்கை பனி மலை அமைக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் நீர் கொட்டுவது இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கிவிட்டது. பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்தனர்.
கோடை விடுமுறைக்கு சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குன்னூர் கோத்தகிரியில் நேற்று காய்கறி கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.