ஈரோடு மாவட்டத்தில், தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள திம்பம், ஆசனூர் (ஹாசனூர் என்றும் அழைக்கின்றனர்) இயற்கை எழிலுடன் திகழும் மலை வனப் பகுதிகளாகும்.
தமிழகத்தில் கிழக்கு மலைத் தொடர்ச்சியும், மேற்கு மலைத் தொடர்ச்சியும் சந்திக்கும் அழகிய பகுதிகளில் ஒன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகிலுள்ள மலைப்பகுதியாகும்.சந்தன மரங்கள் நிறைந்த அழகிய வனப்பகுதி இது.
நமது கண்ணையும், கருத்தையும் ஒரே சேரக் கவரும் இயற்கைக் காட்சிகள் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.அப்படியொரு காட்சியை சென்னையிலிருந்து திருப்பதி செல்பவர்கள் அடிக்கடி பார்த்திருப்பார்கள்