பதாகை
விமர்சனம்
மாயாண்டி குடும்பத்தார்
சனிக்கிழமை, 13 ஜூன் 2009 12:09   
பத்து இயக்குனர்கள் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் என்ற விளம்பர வாசகங்களுடன் வெளிவந்திருக்கிறது இராசு மதுரவனின் மாயாண்டி குடும்பத்தார். காதல், பாசம், வீரம், துரோகம், பொறாமை, கோபம் என அனைத்தும் கலந்து காவியமாக மணக்கிறது இந்த கிராமத்து கதம்பம். அண்ணன், தம்பி குடும்பத்தின் சொத்து தகராறு என்ற மெல்லிய இழைதான் கதை. அதில் இராசு மதுரவன் தொடுத்திருக்கும் சரம், சில நேரம் கண்ணில் நீரை வரவழைக்கிறது, சில நேரம் சி‌ரிப்பில் வயிறை குலுங்க வைக்கிறது. மாயாண்டியாக வரும் மணிவண்ணன் குடும்பத் தலைவர். நடிப்பிலும் இவரே தலைவர். மகன் தருண்கோபியின் படிப்புக்காக கண்ணீர்விட்டு கதறும்போது நம்மையும் கலங்கடிக்கிறார். மாயாண்டி மணிவண்ணனுக்கு மைல் கல். தருண்கோபியின் மீதுதான் மொத்த கதையும் பயணிக்கிறது. சும்மாவே சோகத்தை காட்டும் முகம் என்பதால் அண்ணிகள் அவமானப்படுத்தும்போதும், காதலியை பி‌ரியும் போதும் காட்சியோடு ஒன்றிப் போகிறது தருணின் நடிப்பு. சேரனின் இரண்டாவது அவதாரம்போல் எப்போதும் சோகத்தையே பிழிந்து கொண்டிருப்பது ஏனோ?


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
தோரணை- பட விமர்சனம்
சனிக்கிழமை, 30 மே 2009 16:47   
நடிகர்கள்: விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், சந்தானம், கிஷோர், ஷாயாஜி ஷிண்டே, லால்ஒளிப்பதிவு: ப்ரியன்இசை: மணி ஷர்மாஇணை தயாரிப்பு: ஸ்ரேயா ரெட்டிதயாரிப்பு: ஜிகே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் விக்ரம் கிருஷ்ணாஇயக்கம்: சபா அய்யப்பன்மக்கள் தொடர்பு: நிகில் முருகன்சத்யம் சறுக்கலைச் சரிகட்ட விஷால் மிகவும் மெனக்கெட்டு உருவாக்கியதாகச் சொன்ன படம் தோரணை.சின்ன வயதில் வீட்டை விட்டு ஓடி சென்னை வந்துவிட்ட






முழு செய்தியை படிக்க
 
சர்வம்
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:21   
2003 ஆண்டு வெளியான அலெஜான்ரோ கொன்சலஸ் இனா‌ரித்து இயக்கிய 21 கிராம்ஸ் சாயலில் வெளிவந்திருக்கிறது விஷ்ணுவர்தனின் சர்வம். ஆர்யா இளம் ஆர்க்கிடெக்‌ட். அவருக்கு த்‌ரிஷா மீது கண்டதும் காதல். த்‌ரிஷா ஒரு டாக்டர். இந்த காதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இந்திர‌ஜித்தையும் அவரது ஆறு வயது மகனையும் வெறியுடன் துரத்துகிறார் ஜே.டி. சக்ரவர்த்தி. இந்திர‌ஜித்தின் மகனை கொலை செய்யவே இந்த துரத்தல். சக்ரவர்த்தியின் மனைவியும், மகனும் இந்திர‌ஜித்தின் கவனக் குறைவால் விபத்தில் இறந்து போகிறார்கள். மகனை இழந்த வலியை இந்திர‌ஜித்தும் அனுபவிக்க வேண்டும். அதற்கு அவரது மகனை கொலை செய்ய வேண்டும்.






முழு செய்தியை படிக்க
 
ராஜா‌திராஜா
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:21   
ராஜா‌திராஜா என பெயர் வைத்து ர‌ஜினியின் தர்மதுரை பாதிப்பில் எடுத்திருக்கிறார்கள் படத்தை. லாரன்சின் உச்ச‌ரிப்பு முதல் உடலசைவு வரை அனைத்திலும் ர‌ஜினி... ர‌ஜினி... கிடைக்கிற வேலை செய்து அண்ணன்கள் மூவரையும் பெ‌ரிய ஆளாக்குகிறார் லாரன்ஸ். அப்பாவின் கடைசி ஆசையாம். ஆனால் அவர்கள்...? ஏழைகளுக்கு உதவுவார்கள் என்று பார்த்தால் சமூகத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறார்கள் மூவரும். அவர்களுக்கு பார்ட்னர் கஞ்சா விற்று மினிஸ்டராகும் மும்தா‌ஜ். நால்வரையும் அவர்கள் ரூட்டிலேயே சென்று நளபாகம் செய்கிறார் லாரன்ஸ்.






முழு செய்தியை படிக்க
 
நியூட்டனின் 3 ஆம் விதி
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:21   
வழக்கமான பழிவாங்கும் கதை. இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு. சேனல் அதிபர் ராஜீவ் கிருஷ்ணாவுக்கு காலை பத்து மணிக்கு மிரட்டல் போன் வருகிறது. போன் செய்கிறவர் எஸ்.ஜே.சூர்யா. சரியாக பன்னிரெண்டு மணிக்கு அதாவது இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவரை கொன்றுவிடப் போவதாக கூறுகிறார் சூர்யா. எதற்கு இந்த மிரட்டல்? சூர்யா யார்? அவர் ஏன் ராஜீவ் கிரூஷ்ணாவை மிரட்ட வேண்டும்? சொன்னபடி சூர்யா தனது சபதத்தை நிறைவேற்றினாரா? புத்திசாலித்தனமான திருப்பங்களுடன் பதில் சொல்கிறது படம். தனது வழக்கமான இரட்டை அர்த்தங்களை தவிர்த்து முரட்டு அவதாரம் எடுத்திருக்கிறார் சூர்யா. அடர்த்தியான மீசையுடன் அப்பாவியாக காண்டத்தை காட்டி ஷாயாலியை காதலிக்க சொல்லும் காட்சி எக்ஸ்சலண்ட்! சின்னதம்பி காதலனாக நடிப்பது சூர்யாவுக்கு இனிக்கிற சக்கரை. எமோஷன்..? சூர்யா நிறைய பழக வேண்டும்.






முழு செய்தியை படிக்க
 


பக்கம் 1 - 6

விளம்பரம்