
1995 ஆம் ஆண்டு தொடங்கி 1997 வரை தொடர்ந்து இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடத்தி சுமார் 200 மில்லியன் டாலர் பணத்தை இறைத்து கட்டியது தான் டைட்டானிக் திரைப்படமாகும். அதே வருடம் வெளியாகி சுமார் 1850 மில்லியன் டாலர் லாபத்தை ஈட்டித்தந்தது இந்த திரைப்படம்.
ஹாலிவுட் திரையுலகில் மட்டும் ஆல் உலகில் இந்தியா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த திரைப்படம் சக்கை போடு போட்டது. இவ்வவளவு பெரிய பிரம்மாண்டமான கப்பலை யாரும் இதற்கு முன்பு பார்த்திருக்கவில்லை என்பதால் இத்திரைப்படத்திற்கு மவுசு மேலும் கூடியது.
அது மட்டும் அல்லது இத்திரைப்படம் விருதுகளையும் வாரிக்குவித்தது. 14 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகளை தட்டிச்சென்றது. அந்த ஆண்டில் டைட்டானிக் பெறாத விருதே இல்லை எனலாம்.
இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர் ஜேம்ஸ் கேமரூன் (James Cameron). இவர் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய அவதார் (Avatar) திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
இப்பொழுது மேலும் ஒரு கூடுதல் மகிழ்ச்சியான நமக்கு, அதாவது வரும் 2012 மத்தியில் டைட்டானிக் திரைப்படத்தின் 3டி பதிப்பு வெளிவருகிறது என்பது தான் அது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் (James Cameron) ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் அவர் கூறும் போது " திரை உலகின் மிகப்பெரும் படைப்பான டைட்டானிக் திரைப்படத்தை இப்பொழுது 3டி பதிப்பாக மாற்றும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் 2012 மத்தியுள் இத்திரைப்படத்தின் 3டி பதிப்பை வெளியிட இருக்கிறோம். மேலும் அவதார் (Avatar) திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவதார்-2 (Avatar-2) தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளோம். அவதார்-2 (Avatar-2) திரைப்படம் 2014 -ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம், மேலும் அவதார்-3 (Avatar-3) 2015 -ஆம் ஆண்டு இறுதில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்" எண்டு கூறினார்.
மீண்டும் ஒரு திரைப்புராட்சி ஏற்ப்படவிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


