பதாகை
செய்திகள்
வேலுபிரபாகரனின் அடுத்த படம்
புதன்கிழமை, 02 செப்டம்பர் 2009 08:19   

 

‘காதல் கதை’ படத்தை அரைகுறை ஆடையுடன் எடுத்து வெளியிட்ட வேலுபிரபாகரன் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். படத்திற்கு ‘தேவதாசி’ என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தின் பெயரைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்கும், இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பது. ‘காதல் கதை’ படத்தை வாங்கி விநியோகம் செய்த ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் ‘தேவதாசி’யை தயாரிக்கிறது. இப்போத நடிகர் நடிகைகள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார் வேலுபிரபாகரன்.

 

 
பரத்வாஜ்க்கு கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தேன்
புதன்கிழமை, 02 செப்டம்பர் 2009 08:13   

 

‘பரத்வாஜை கூப்பிட்டு நான் வாய்ப்பு கொடுத்தும் நான் அழைத்தும் அவர் இந்த விழாவுக்கு வரவில்லை என்று’ தாக்கினார் கே.டி. குஞ்சுமோன். ‘காதலுக்கு மரணமில்லை’ படத்தை தயாரித்துள்ளார் குஞ்சுமோன். இந்தப் படத்தின் கதையை படத்தின் இயக்குநர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு குஞ்சுமோன் உச்சத்தில் இருக்கும்போது கூறியுள்ளார். அந்தக் கதையைக் கேட்டு அசந்து போன குஞ்சுமோன் இயக்குநரிடம் நாம் தயாரிக்கலாம் என்று வாக்கு கொடுத்திருக்கிறார் ஆனால் குஞ்சுமோனின் வீழ்ச்சியின் காரணமாக அந்தப் படம் தயாரிக்கும் பணிகள் முடங்கிப் போயின. சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கதையைப் படமாக்கியுள்ள குஞ்சுமோன் ‘காதலுக்கு மரணமிருக்கோ இல்லையோ என் வாக்குக்கு மரணமில்லை... கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன்’ என்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பரத்வாஜை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய குஞ்சுமோன் ‘பரத்வாஜ், படமே இல்லாமல் சும்மா இருந்த போது கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் கூப்பிட்டும் வரவில்லை. அவருக்கு என் நன்றிகள்” என்று ஒரு போடு போட்டார்.

 

 
கார்த்திகாவின் தவிப்பு
புதன்கிழமை, 02 செப்டம்பர் 2009 08:10   
(5 votes, average 4.40 out of 5)

 

விரைவில் வெளியாக உள்ள ‘மதுரை சம்பவம்’, ‘வைதேகி’ ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார் கார்த்திகா. இந்த இரண்டு படங்களையும் எதிர்பார்த்து காத்திருக்கும் கார்த்திகா, ‘மதுரை சம்பவம்’ படத்தை பெரிதும் நம்பியுள்ளார். காரணம் இந்தப் படத்தின் ஹீரோ ஹரிகுமாருடன் இவர் நடித்த ‘தூத்துக்குடி’ படம் ஹிட்டானது. அதே போல் இந்தப் படமும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கிறார் கார்த்திகா. அதே நேரத்தில் இந்தப் படத்தில் ஹரிகுமாருக்கு இன்னொரு ஜோடியும் இருக்கிறார். அவர் ‘சிவா மனசுல சக்தி’யில் நடித்த அனுயா. இவர் இந்தப் படத்தில் ஹீரோவுடன் நெருங்கி நடித்துள்ளார். எனவே படம் ஓடினாலும் தனக்கு நல்ல பெயர் கிடைக்குமா இல்லை அனுயாவுக்கு கிடைக்குமா? புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் கார்த்திகா. ‘வைதேகி’ குறைந்த செலவில் எடுக்கப்பட்டு வெளியாகவிருக்கும் படம். இரண்டில் ஏதாவது ஒன்றாவது ஹிட்டானால் தேவலை... என்ற எண்ணம் தான் இப்போது கார்த்திகாவுக்கு.

 

 
மதுரை சம்பவம் ஒரு உண்மைக்கதை
திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2009 20:30   

 

நடன இயக்குநர் ஹரிகுமார் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மதுரை சம்பவம்’. ஏற்கனவே ‘தூத்துக்குடி’ படத்தில் நடித்தன் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த படத்தில் ஹீரோவாகி உள்ளார். இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள்.

கார்த்திகா மற்றும் அநுயா. கார்த்திகா ஹரிகுமாருடன் முதல் படத்திலும் ஜோடி சேர்ந்தவர். மறுபடியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள். அனுயா, ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் அறிமுகம் ஆனவர். இந்தப் படத்தில் படுக்கையறை காட்சிகளில் பட்டையைக் கிளப்பி உள்ளாராம். இந்தப் படத்தின் மூலம் பாடலாசிரியர் யுரேகா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.

மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் தான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தை என்டிடிவி இமேஜின் பிலிம்ஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

 

 
கேரளத்து கிளி நீனு கார்த்திகா
திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2009 10:05   

 

‘மெய்யாலுமே பொய்’ படத்தில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கேரக்டரில் நடித்து வருகிறார் ‘நீனு கார்த்திகா’. கேரளத்து பைங்கிளியான இவர் மலையாளத்தில் ‘ரெட் சில்லி’ என்ற படத்திலும் தமிழில் ‘சுராங்கனி’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

‘மெதுவா மெதுவா தொடலாமா’ படத்தில் நடித்து வரும் நீனு கார்த்திகா தெலுங்கில் ஒரு படத்திலும் ஹீரோயினாக வேஷம் கட்டிக் கொண்டிருக்கிறார். சென்டிமென்டான காட்சிகள் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்..

இதனால் சென்டிமென்ட் காட்சிகளில் தன்னை மறந்தே நடிப்பாராம். அதிகமாக கவர்ச்சி காட்டமாட்டேன் என்று சொல்லும நீனு கார்த்திகாவிடம் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால் ‘அது ஒரு சுகமான உணர்வு’ என்று அழுத்தமாக சொல்கிறார்.

 

 


பக்கம் 1 - 45

விளம்பரம்