பதாகை
கிசு கிசு
வேலுபிரபாகரனின் அடுத்த படம்
புதன்கிழமை, 02 செப்டம்பர் 2009 08:15   

 

‘காதல் கதை’ படத்தை அரைகுறை ஆடையுடன் எடுத்து வெளியிட்ட வேலுபிரபாகரன் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். படத்திற்கு ‘தேவதாசி’ என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தின் பெயரைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்கும், இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பது. ‘காதல் கதை’ படத்தை வாங்கி விநியோகம் செய்த ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் ‘தேவதாசி’யை தயாரிக்கிறது. இப்போத நடிகர் நடிகைகள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார் வேலுபிரபாகரன்.

 

 
காத‌ல் நடிகருக்கு கால்கட்டு
புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:41   
காதல் நடிகருக்கு வீட்டில் தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்கள். நாளுக்கு நாள் நடிக‌ரின் மன்மத விளையாட்டு அதிக‌ரித்து வருவதால்தான் இந்த அவசரமாம். சிக்ஸ்பேஸ் படத்தில் தன்னுடன் நடிக்கும் முத்தழகியுடன் லேட் நைட் பார்ட்டிகளில் நடிகர் கலந்து கொள்கிறாராம். இந்த உறவு திருமணம் வரை சென்றுவிடக் கூடாதே என்பதுதான் நடிகர் வீட்டிலுள்ளவர்களின் ஒரே கவலை.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
திட்டு வாங்கிய திமிரு இயக்குனர்
புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:41   
புதுசாக ஹீரோவான திமி‌ரில் பழைய ஹீரோக்களை சகட்டுமேனிக்கு சதாய்த்து வருகிறார் திமிரு இயக்குனர். இது தங்களது கே‌ரியரை பாதிக்குமோ என்ற கலக்கம் அவருடன் நடித்த மற்ற இயக்குனர்களுக்கு. திமி‌‌‌ரின் ஒன்றரையணா பேச்சால் நம்மையும் சில்லரையாக இன்டஸ்ட‌ரியில் நினைத்து விடுவார்களோ என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது. இதன் காரணமாக திமிரை போனில் லெப்ட் அண்டு ரைட் வாங்கியிருக்கிறார்கள் உடன் நடித்த சீனியர் இயக்குனர்கள். மற்றவர்கள் படத்தின் இயக்குன‌ரிடம் புலம்ப அவர் தனது பங்குக்கு திமிரை திருகி எடுத்திருக்கிறார். இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காதவர் திகிலடித்து போயிருக்கிறார்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
சிக்கலில் ஜென்டில்மேன்
புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:41   
முரட்டு மீசைக்காரரான அந்த ஜென்டில்மேன் இருந்த பணத்தையெல்லாம் தொலைத்துவிட்டு மீண்டும் ஒரு படத்தை தொடங்கினார். லவ்வுக்கு டெத் இல்லை என்ற அந்தப் படம் பாதியில் நிற்கிறது. இது ஒருபுறமிருக்க அவரது மகன் மலையாள பெண் குட்டி ஒருவ‌ரிடம் மனதை பறி கொடுத்ததோடு அவருடன் குடும்பமும் நடத்தி வருகிறாராம். இரண்டு பிரச்சனைகளுக்கு நடுவில் மத்தளம் மாதி‌ரி மாட்டிக் கொண்டிருக்கிறார் மிஸ்டர் ஜென்டில்மேன்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
தீர்ப்பை மாற்றிய நாட்டாமை
திங்கட்கிழமை, 15 ஜூன் 2009 10:48   
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஆப்பு அடித்ததால் தனது வருங்கால திட்டத்தில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார் நாட்டாமை. குறிப்பாக சங்கத் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்ற தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். இன்னும் சில வருடங்களுக்கு வார்ட் மெம்பர் பதவிகூட கிடைக்கப் போவதில்லை. இருக்கிற சங்கப் பதவியை ஏன் வீணாக கைவிட வேண்டும் என்ற இல்லத்தரசியின் அ‌ட்வைஸ்தான் நாட்டாமையின் தீர்ப்பு மாறியதுக்கு காரணமாம்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 


பக்கம் 1 - 6

விளம்பரம்