
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (14ஆம் தேதி) வெயியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 7 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
கடந்த 8 ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வரும் 14 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ்.வெப்துனியா.காம் என்ற இணையதளத்திலும் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.


