பதாகை
பள்ளி செய்திகள்
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியீடு
வியாழக்கிழமை, 14 மே 2009 09:55   

பிளஸ 2 தேர்வு முடிவில் சென்னை சூளைமேடு டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. பூமிகா 1190 மதிப்பெண் பெற்று முதல் ரேங்க் பெற்றுள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த எம்.கார்த்திக் 1188 மதிப்பெற் பெற்று 2ம் ரேங்க் பெற்றுள்ளார். சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குமரன், ராம்கிஷோர் ஆகியோர் தலா 1186 மதிப்பெண் பெற்று 3வது ரேங்க் பெற்றுள்ளார்.

மொத்த தேர்ச்சி சதவீதம் 83%. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை 6 லட்சத்து 409 ஆயிரத்து 844 பேர் எழுதினர். இதில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 222 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 762 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 

 

 

 

 

 
நாளை +2 தேர்வு முடிவுகள்
புதன்கிழமை, 13 மே 2009 11:13   

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (14ஆம் தேதி) வெயியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 7 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

கடந்த 8 ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வரும் 14 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இத‌னிடையே த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் எ‌ன்ற இணையதள‌த்‌திலு‌ம் நாளை ‌பிள‌ஸ் 2 தே‌ர்வு முடிவு வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது.

 
பிளஸ் டூ தேர்வு முடிவு-மே 18ல் வெளியாகலாம்
புதன்கிழமை, 06 மே 2009 14:35   

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டு விட்டதாலும், தவறு இல்லாமல் முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற அக்கறையாலும், இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வு முடிவுகள் தேர்தல் முடிந்த பிறகுதான், அதாவது மே 18ம் தேதி வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வேகமாக வெளியாகி வருகின்றன.

மே முதல் வாரத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியாகி விடுவது வழக்கம். எனவே இந்த ஆண்டும் அதேபோல வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் தேர்தல். மேலும் இன்னும் மதிப்பெண் பட்டியலை தயார் செய்யும் பணியும் முடியவில்லை.

எப்போது தேர்வு வெளியாகும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், தேர்வு முடிவு வெளியிடுவதற்கான இறுதி கட்டப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, தேர்வு முடிவை வழக்கமான காலகட்டத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக செய்தால் தவறுகள் நேர்வதற்கு அபாயம் உள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தலும் 13ம் தேதி வருகிறது.

எனவே தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்வு முடிவை வெளியிட்டுவிடலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. மே மாதம் 3-வது வாரத்தில் அனேகமாக 18ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தேர்வுத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

எனவே தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் பிளஸ்டூ தேர்வு முடிவு வெளியாகும் எனத் தெரிகிறது.

வாக்கு எண்ணிக்கை 16ம் தேதி நடைபெறுகிறது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே 18ம் தேதியன்று தேர்வு முடிவு வெளியாக பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

 


விளம்பரம்