
பிளஸ 2 தேர்வு முடிவில் சென்னை சூளைமேடு டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. பூமிகா 1190 மதிப்பெண் பெற்று முதல் ரேங்க் பெற்றுள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த எம்.கார்த்திக் 1188 மதிப்பெற் பெற்று 2ம் ரேங்க் பெற்றுள்ளார். சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குமரன், ராம்கிஷோர் ஆகியோர் தலா 1186 மதிப்பெண் பெற்று 3வது ரேங்க் பெற்றுள்ளார்.
மொத்த தேர்ச்சி சதவீதம் 83%. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை 6 லட்சத்து 409 ஆயிரத்து 844 பேர் எழுதினர். இதில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 222 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 762 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.






